#BREAKING:- ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார்.  பொதுமக்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவைகள் வழங்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.  இதில் சுகாதார ஆய்வாளர்கள் , கிராம செவிலியர்கள்,  தன்னார்வலர்கள் போன்றோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றினர்.  அதேபோல் இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகியவை மூலம் சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டு , முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை அரசு மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது , தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் 5,971 ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு அளிக்கப்படும். 2448 சுகாதார பணியாளர்களுக்கும் 11,000- ல் இருந்து 14,000 ஆக ஊதிய உயர்வு வழங்கப்படும்.

அதேபோல், இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4,848 செவிலியர்களுக்கு ரூபாய் 18,000-மாக ஊதியம் உயர்த்தப்படும்.  ஹெல்த்கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 3,000 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.  ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் ” என்றார். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.