எடியூரப்பாவின் போராட்ட குணத்தை சிறுவயது முதலே பார்த்து வருகிறேன்: விஜயேந்திரா பெருமிதம்

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் சிவக்குமார சுவாமிஜியின் 115-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கர்நாடக மாநிலம் பல முதல்-மந்திரிகளை கண்டுள்ளது. அதில் எடியூரப்பா ஒரு தனித்துவமானவர். கர்நாடகத்தில் பா.ஜனதாவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. விவசாயிகள், தலித் மக்களின் துயரத்தை துடைத்தவர் எடியூரப்பா.

அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் போராட்ட குணத்தை சிறுவயது முதல் இருந்தே பார்த்து வருகிறேன். அவர், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மடாதிபதிகள் மற்றும் பொதுமக்களால் 4 முறை அவர் முதல்-மந்திரி பொறுப்பு வகித்தார்.

இதுவரை எந்த முதல்-மந்திரியும் செய்யாத நலத்திட்டங்களை எடியூரப்பா செய்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை யாரும் மறக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.