இவைகளை வெளியிடக் கூடாது.. டிவி சேனல்களுக்கு அரசு எச்சரிக்கை..!

த்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தனியார் டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ.டி.டி. எனப்படும் இணைய பொழுதுபோக்கு தளங்களுக்கென தனித்தனியாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளிட்டுள்ளது.

அதில், ‘வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்லைன் சூதாட்ட தளங்கள், இணைய செய்தி தளங்கள் என்ற பெயரில் புதிய வகையில் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த சூதாட்ட தளங்களின் இணைய செய்தி தளங்கள் நம் நாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி, சட்டவிதிகளுக்கு புறம்பாக விளம்பரங்கள் செய்து வருகின்றன.

இந்த சூதாட்ட தளங்களின் இணைய செய்தி தளங்கள் நம் நாட்டில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதை டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ.டி.டி. தளங்கள் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற விஷயத்தில் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.இதையும் மீறி சூதாட்ட நிறுவனங்களின் செய்தி தளங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.