தெருவில் போவோர், வருவோரை கடித்துக் குதறும் வளர்ப்பு நாய்கள் ; உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தெருவில் போவோர் வருவோரை கடித்துக் குதறும் வளர்ப்பு நாய்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இனாம்மணியாச்சி நிலா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். நாய்களை அவர் கட்டிப்போட்டு பராமரிப்பதில்லை என்று கூறப்படும் நிலையில், அவ்வழியாக நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோரை அவை விரட்டி விரட்டி கடித்துக் குதறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் புகாரளித்துள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.