மனைவியை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட கணவர்.. பிரபல நாட்டில் நடந்த கொடூர சம்பவம்!


பிரேசிலில் ஒருவர் தனது மனைவியை வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரேசில் நாட்டில் வசித்து வருபவர் Mauro Sampietri(59). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் தடையாக இருந்ததால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து பின்னர் தனது மனைவியின் உடலை சமைத்து சாப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் Mauro Sampietri-யை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் 2வது திருமணம் செய்து கொள்ள என் மனைவி தடையாக இருந்ததால் அவரை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் வீட்டில் நடத்திய சோதனையில் உடலின் சில எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கொடூர கொலைச் செயலானது ஜனவரி 2017 ஆண்டு நடந்துள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் Mauro Sampietri ஜெயிலில் இருந்து தப்பித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் 5 வருடங்களுக்கு பிறகு பொலிஸ் வலையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.