ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர்
மம்தா பானர்ஜி
தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக
ஜக்தீப் தன்கர்
பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

இதனிடையே, அரசியலமைப்பு சட்டத்தின், 174ஆவது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை, பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் முடக்கி வைத்து அம்மாநில ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து மம்தா பானர்ஜி அரசு பரிசீலித்து வந்த நிலையில், மேற்குவங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்தி வைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த உத்தரவு அரசின் செயல்பாடுகளை பாதிக்கும். அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கும் வழி வகுக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில்,
மேற்குவங்க ஆளுநர்
ஜக்தீப் தன்கரை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம பிரசாத் சர்கார் மனுத்தாக்கல் செய்தார். அதில், தங்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் ஜக்தீப் தன்கர் தலையிடுவதாகவும், அவர் பாஜகவின் குரலாக பேசி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, ஆளுநர் ஜக்தீப் தன்கரை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த
கொல்கத்தா உயர் நீதிமன்றம்
, மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை நீக்கக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.