குடும்பத்தினருடன் சந்திப்பு: பாசம் பறிமாறிய இயக்குனர்கள் பா ரஞ்சித்- மாரி செல்வராஜ்

Tamil Cinema Directors Mari Selvaraj Pa.Ranjith Meet : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ், ரஜினியின் காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஆர்யா நடிப்பில், சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

சமூக நீதி கருத்துக்களை தனது படத்தின் மூலம் பிரதிபலிக்கும் பா.ரஞ்சித்த அடுத்ததாக நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கம் மட்டுமல்லாது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வரும் பா.ரஞ்சித் 2018-ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

சாதிய பாகுபாடு குறித்து தெளிவாக எடுத்துக்கூறிய இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமானார். பா.ரஞ்சித் போலவே சமூக நீதி கருத்தக்களை தனது படங்களை ஆழமாக கூறும் மாரி செல்வராஜ் தொடர் தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் படத்தின் பணிகளில் உள்ள மாரி செல்வராஜ், அடுத்த துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் தங்களது குடும்பத்துடன் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துளள மாரி செல்வராஜ், உன்னதமான இளைப்பாறுதலுக்கு நிலைத்த அன்பில் பருகும் தேநீர் போதுமானது என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தொடர்பான பதிவு தற்போது இணையத்தில வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.