போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய அலுவலக நேரம்- சண்டிகரில் நடவடிக்கை

பஞ்சாப் மாநில தலைவர் சண்டிகரில் அலுவலக நேரம் மாற்றயமைத்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் இருந்து பஞ்சாப், அரியானா மற்றும் மத்திய அரசு உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்கள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சண்டிகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அலுவலக நேரம் மாற்றி நடவடிக்கை எடுக்க சண்டிகர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, புதிய அலுவலக நேரப்படி காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரும் 21-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் சண்டிகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. தானே- திவா இடையே புதிய ரெயில் தடங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.