திருமங்கலம் நகராட்சியின் 17வது வார்டில் மறு வாக்குப்பதிவு – தேர்தல் அலுவலர் பரிந்துரை

மதுரை திருமங்கலம் நகராட்சியின் 17-வது வார்டில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் அலுவலர் பரிந்துரைத்துள்ளார்.
27 வார்டுகளை உள்ளடக்கிய திருமங்கலம் நகராட்சியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 17 வது வார்டுக்குட்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் கள்ள வாக்கு பதிவாகி உள்ளதாக வேட்பாளர்கள் புகார் எழுப்பப்பட்டது. புகாரை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் டெரன்ஸ் லியோன் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி?- மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் |  How will the counting of votes take place What are the procedures followed  in the centers | Puthiyathalaimurai ...
மறு வாக்குப்பதிவிற்கான தேதி குறிப்பிடப்படாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.