பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

செங்கல்பட்டு அருகே இரவோடு இரவாக மர்மநபர்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிய உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

மேலும், கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.