சண்டையை விலக்கி விட சென்ற இருவர் கொலை| Dinamalar

ஷிவமொகா : சண்டையை விலக்கி விட சென்ற இரண்டு நண்பர்களை, நண்பர்களே கொலை செய்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷிவமொகாவின் சூளேபைலு கிராமத்தை சேர்ந்தவர்கள் சலீம், 22, அப்துல், 23. இவர்களின் நண்பர் திப்பு, 22. நேற்று முன் தினம் நள்ளிரவு, ஏதோ காரணத்தால் திப்பு, தன் வீட்டில் சண்டை போட்டார். இதையறிந்து அங்கு சென்ற நண்பர்கள் இருவரும் புத்திமதி கூறி, சண்டையை விலக்கி விட முயற்சித்தனார்.

தன் வீட்டு விஷயத்தில், இவர்கள் தலையிட்டதால் கோபமடைந்த திப்பு, தன் மற்ற நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, இருவரையும் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை தேடுகின்றனர். துங்காநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.