கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் 3 வார்டுகளில் தி.மு.க. வெற்றி

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 145 பேர் போட்டியிட்டனர். மொத்த ஓட்டுகள்- 24,083 பதிவான வாக்குகள்-23,000.

இன்று காலை 8 மணி அளவில் கோட்டக்குப்பம் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 1 முதல் 3 வார்டுகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 3 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

1-வது வார்டு ஜெயமூர்த்தி (தி.மு.க.), 2-வது வார்டு கலாமணிகண்டன் (தி.மு.க.), 3-வது வார்டு ஆதிலட்சுமி பாஸ்கர் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதற்கு பா.ம.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. அருண் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.