கீவ் நகரில் இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றம்: வெளியுறவுத்துறை| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் சிரிங்காலா கூறியது, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அடுத்த மூன்று நாட்களில் சுமார் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளனன . புடா பெஸ்ட் புகாரெஸ்ட் நகரங்களை தவிர சுலோவாகியா போலந்து நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுவர். கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இப்போது இல்லை, இந்தியர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

மனிதாபிமான அடிப்படையில் உதவி

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள், மீட்பு பொருட்கள் விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்க உள்ளது.மேலும் மற்றொரு விமானம் மூலம் உதவிப்பொருளும் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவ்வாறுவெளியுறவுத்துறை செயலர் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.