குடும்பத்தினர் கண் முன்னே தந்தை மகனுக்கு நிகழ்ந்த கொடூரம்.. சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்..!

குடும்பத்தினர் கண்முன்னே  தந்தை மகன் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் தனது குடும்பத்தினருடன் நாகூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.  அப்போது நாகூர் தர்காவில் வழிபாடு முடித்து விட்டு அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு  அவரும் அவரது மகன் முகம்மது எனும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கடலில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது ஷமீர் அகமதுவும்  அவரது மகன் முகமதுவும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் குடும்பத்தினர் கண்முன்னே தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.