மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் மகன் உயிரிழப்பு: நிறுவன ஊழியர்கள் இரங்கல்..!!

மும்பை: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவின் 26 வயதான மகன் ஜைன் நாதெள்ளா திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெள்ளா இருந்து வருகிறார். இவருக்கு ஜைன் நாதெள்ளா என்ற மகன் இருந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்டின் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா மகன் ஜைன் நாதெள்ளா பிறவியிலேயே பெருமூளைவாத நோயான தசை இயக்கம், தசைநார் பெருமூளை வாதம் ஆகிய குறைகளுடன் பிறந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜைன் மும்பையில் காலமானார். ஜைன் நாதெள்ளா மறைவு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் நமது சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா மகன் ஜைன் நாதெள்ளா மறைவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.