உக்ரைனின் தொழில்நகரமான கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியது ரஷ்யா

கிவ்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள  ரஷ்யா கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கெர்சன்  முழுமையாகக் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ்-ஐ கைப்பற்ற ரஷியா படைகள் முன்னேறி வருகின்றன.  உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்,  ரஷ்ய படையினர் நேற்று உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் உயிரிழந்தனர். மேலும், கார்கிவில் போலீஸ் தலைமையகத்தில் ரஷிய ராணுவம் ராக்கெட் மூலம் பயங்கர தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. அந்த கட்டிடம் முழுவதும் எரிந்த நிலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே வேளையில் மற்றொரு குழு, உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வந்தது. கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும். சுமார் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20 சதவீத ரஷிய நாட்டினர் வசித்து வருகின்றனர். தெற்கு உக்ரைனில் இந்த தொழில் நகரத்தை  ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,  ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்துள்ளது. கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், கார்கிவ் முழு உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ளது, பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதலில் இதுவரை 536 பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் லிஸ் ட்ராஸ்லர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.