தேர்தலைச் சந்திக்க அஞ்சும் நிர்மலா சீதாராமன் :  வி சி க விமர்சனம்

சென்னை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலைச் சந்திக்க அஞ்சுவதாக வி சி க துணைப் பொதுச் செயலர் ஆளூர் ஷ நவாஸ் விமர்சித்துள்ளார்.    நாஇபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போது மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் பலரை வேட்பாளர்களாக பாஜக களம் இறக்கி உள்ளது. ஆயினும் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. நிர்மலா சீதாராமன் இது குறித்துக் கூறுகையில், “ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு … Read more

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா43 படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ள சூர்யா44 படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சிறுத்தை சிவா இயக்கியுள்ள சூர்யா-வின் 42வது படமான ‘கங்குவா’ ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. My Next … Read more

தலைவர் 171 அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்…

தலைவர் 171 குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். #Thalaivar171TitleReveal on April 22 🔥 pic.twitter.com/ekXFdnjNhD — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024 ரஜினிகாந்த்-தின் 171வது படமான இந்தப் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று … Read more

பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? திமுக எம்.பி. கேள்வி

பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? என்று திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் குறித்து அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் ஆட்சபம் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஆனால் நீதிமன்ற முத்திரைத்தாளில் அண்ணாமலை … Read more

‘நிர்மலா-தாய் தேர்தல் நிதி’ மூலம் பணம் திரட்ட நாங்க ரெடி… போட்டியிட நீங்க ரெடியா ? நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி…

தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக திரட்டிய பல்லலாயிரம் கோடி ரூபாய் நிதி எங்கு சென்றது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆளுநர், மத்திய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சிலரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக நிர்பந்தித்துள்ள நிலையில் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிடாமல் சொகுசான பதவியில் அமர்ந்துகொண்டு பாஜக தொண்டர்கள் முதுகில் ஏறி சவாரி செய்வதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த … Read more

தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் : கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சமாக நடப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணை செயலர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கீடு பெற்ற சின்னங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தன.  தேர்தல் ஆணையம் இந்த முறையீடுகள் மீது பாரபட்சம் காட்டாது, சார்பற்ற … Read more

மத்திய அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகை

சென்னை வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார். நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. கட்சித் தலைவர் தொகுதி பங்கீடு, வேட்பாளர் … Read more

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற கோயில் பூசாரியிடம் இருந்து தகுதிச் சான்று பெறுவது அவசியம்…

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும் அதில் விண்ணப்பதாரரின் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் பூசாரியிடம் இருந்து தகுதிச் சான்று பெறவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழங்கப்பட்டுள்ள 1032 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘தி இந்து’ நாளிதழ் நடத்திய விசாரணையில் விண்ணப்பதாரர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் … Read more

நடிகர் விவேக் மகள் திருமணம்.. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தந்தையின் நினைவாக பரிசு…

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி திருமணம் சென்னையில் நேற்று எளிமையாக நடந்தது. விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கும், பரத் என்பவருக்கும் விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் வீட்டில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்த நடிகர் விவேக்கிற்கு தேஜஸ்வினி, அமிர்தா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். “க்ரீன் கலாம்” என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பதைக் கனவாக வைத்து அதனை செயல்படுத்தி வந்தார் நடிகர் … Read more

ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி…

திருவனந்தபுரம்: இரண்டாவது முறையாக வயநாட்டில் மீண்டும் போட்டியிடும்  ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவைக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளத. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து,   ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அன்றைய … Read more