பள்ளி வேன்மீது ரயில் மோதல்: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த விபத்து குறித்து தகவல்அறிந்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சர்கள், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி … Read more

2 மாணவர்களை பலி கொண்ட கடலூர் பள்ளி வேன்மீது ரயில் மோதி விபத்து! கேட்கீப்பர் கைது…

கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில்  பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் பலியானதுடன் பலர் பலத்த காயமடைந்து உள்ளனர். இந்த விபத்துக்கு காரணம்,  ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டு உள்ளார். ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சம்பவ … Read more

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா டிக்ளர் செய்தது ஏன் ? கேப்டன் வியான் முல்டர் விளக்கம்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பிரையன் லாரா-வின் சாதனையை முறியடிக்க மனமில்லாததால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை டிக்ளேர் செய்ததாக தென் ஆப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் கூறியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளாயாட ஜிம்பாப்வே சென்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோ நகரில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஞாயிறு … Read more

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் த்டை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம். “சென்னையில் 08.07.2025 இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அடையார்: சாஸ்திரி நகர் முதல் கடல் வார்டு சாலை, 3 கடல் வார்டு சாலை, பாலகிருஷ்னா சாலை, ஜெயராம் … Read more

சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

சென்னை: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து  உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுய சான்றிதழ் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான ஆணைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் சந்தித்து ஆணைகளை காண்பித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேல் கட்டட அனுமதிகள் … Read more

நாளை மறுநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது  நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.  இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவி;ல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய … Read more

மாலை 4 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர், இன்று மாலை 4 மணி முதல் திருச்செந்தூர்  கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அன்மதி அளிக்கபட்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு கடந்த மாதம் 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி கடந்த 1ம் தேதி முதல் கோயில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய … Read more

டாஸ்மாக் ஊழியர்க: ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை டாஸ்மாக் ஊழியர்கள் ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிர்த போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில்ட ாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின் வருமாறு : குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்தமுறையை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தி நிலுவையுடன் வழங்க வேண்டும். 22 … Read more

திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவு : தினேஷ் குண்டு ராவ்

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், “மாரடைப்பால் இறப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயமாக்கப்படும்” என்றார். 45 வயதுக்குட்பட்ட நபர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிய, கர்நாடக அரசு அத்தகைய இறப்புகளை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும், மாரடைப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க … Read more

18 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல்… இந்தோனேசியாவின் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை மீண்டும் வெடித்தது…

இந்தோனேசியாவின் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அடர்த்தியான எரிமலை சாம்பல் தூண் போல் வானத்தில் எழுந்து நின்றதாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பால், எரிமலை சாம்பல் 18 கிலோமீட்டர் உயரத்துக்கு வானத்தில் எழுந்தது. இதனால் அதனைச் சுற்றி உள்ள கிராமங்கள் முழுவதும் சாம்பல் படிந்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. ஜூன் 18 அன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பை அடுத்து எரிமலையின் எச்சரிக்கை நிலையை அந்நாட்டின் புவியியல் நிறுவனம் மிக … Read more