டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை: மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்த அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது. 2025 ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.ஏற்கனவே திமுக, அதிமுக என இரு கூட்டணிகளி உள்ள நிலையில், இந்த முறை தவெக தனி கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. … Read more

திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு! அமலாக்கத்துறை தகவல்…

மதுரை: தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலர் சங்கர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. 29வது வார்டு திமுக கவுன்சிலரான … Read more

உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….

சென்னை:  2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் வரும் 27ம் தேதி (காலை மற்றும் மாலை) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களிலும் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் … Read more

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால்

வாரணாசி: இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை ர் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சேவை வாரணாசியில் ல் தொடங்கப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கேட்டமரன் கப்பல் 50 இருக்கைகள் கொண்ட பூஜ்ஜிய-உமிழ்வு, சுத்தமான உந்துவிசையுடன் கூடிய 24 மீட்டர்  நீளத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது.  “மோடி அரசாங்கத்தின் கீழ் நிகர-பூஜ்ஜிய நீர்வழிகளை நோக்கி ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பயணிகள் … Read more

ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!

அமராவதி: ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர் ஆந்திரப் பிரதேசத்தில் சிந்தூரு-பத்ராசலம் சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 35 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து … Read more

கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்! கைது செய்த போலீசார்

சென்னை:  திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடி வரும்  தூய்மை பணியாளர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்களால் முடியல…நாங்கள் செத்துபோறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மெரினாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் மல்க போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  … Read more

“திட்டமிட்டபடி வரும் 18 ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடக்கும்!” செங்கோட்டையன்…

சென்னை: ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் வரும் 18ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வு திட்டமிட்டப்படி நடக்கும் என முன்னாள் அமைச்சரும்,  தமிழக வெற்றிக் கழகத்தில் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன், ஈரோடு பகுதியில் தனக்குள்ள செல்வாக்கை நிலைநிறுத்த, தவெக தலைவர் விஜய்  மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு … Read more

மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சென்னை: மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தொழிற்துறை  அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். 2024 – 25 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2023 – 24-இல் உள்நாட்டு உற்பத்தி ரூ.26.89 லட்சம் கோடியில் இருந்து 2024 – 25-இல் ரூ.31.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  இது பிரமாண்டமான வளர்ச்சி, வளர்ச்சி விகிதம்  16% அளவுக்கு  உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் இந்த வளர்ச்சி … Read more

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதி மறுத்த நீதிபதிகள்…

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக  அரசு மற்றும் மனுதாரர் தரப்பில்  இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அமர்வு  அனுமதி மறுத்து விட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அமைதியாக இருங்கள் என்று கூறியது. திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இத்த உத்தரவு மதிக்கப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை செய்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு   டிஜிபி, மாவட்ட … Read more

தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை  என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய  வேண்டும் என்று  நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம், ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை இன்று இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.  இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆஜரான … Read more