கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்தபோது பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலி.! <!– கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்தபோது பாறாங்கல் உருண்டு வ… –>

கர்நாடகாவில் உள்ள கல்குவாரியில் வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டபோது, பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கும்பகல்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமகுன்று மலையில், கேரளாவை சேர்ந்த அக்கீம் என்பவர், அரசின் அனுமதி பெற்று குத்தகை அடிப்படையில் கல்குவாரி நடத்தி வருகிறார்.

அங்கு நேற்று பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு கற்களாக மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது, வெடியின் அதிர்வால் குன்றின் மேல் இருந்து பெரிய பாறாங்கல் ஒன்று எதிர்பாராதவிதமாக உருண்டு கீழே விழுந்ததில், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உடல்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும்,தொடர் மீட்பு பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.