கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள்… மார்ச் 8 தண்டனை அறிவிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல்லில் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்துள்ளார்.

இதை ஏற்கமுடியாத சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர், திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து நிலையில், பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்தநிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட மொத்தம் 11 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார்.

குற்றச்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்த நீதிபதி, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை மார்ச் 8 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.