பிரித்தானியாவில் நாய் கடித்து குதறியதில் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: இருவர் கைது


பிரித்தானியாவில் நாய் கடித்து குதறியதில் 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லிங்கன்ஷையரில் உள்ள வூடல் ஸ்பாவிற்கு அருகிலுள்ள ஓஸ்ட்லர்ஸ் தோட்டத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவில் இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

கட்டுப்பாட்டை மீறிய நாய்க்கு பொறுப்பாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் 40 வயதான பெண்ணும் 54 வயது ஆணும் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை மூலம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இது ஒரு விதிவிலக்கான சோகமான சம்பவம், மேலும் இது உள்ளூர் சமூகத்தை பாதிக்கும், அல்லது இதைப் பற்றிக் கேட்கும் எவரையும் பாதிக்கும்.

இந்த சோகத்தை மக்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது என்ன நடந்தது என்று ஊகிக்க ஒரு தூண்டுதல் இருக்கலாம், மேலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம், குறிப்பாக சமூக ஊடகங்களில் உண்மைகள் சிதைந்துவிடும்.

என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், மேலும் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்று தலைமைக் கண்காணிப்பாளர் ஆண்டி காக்ஸ் கூறினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.