வேலூர்: நடந்துசென்றபோது திடீரென கீழேவிழுந்து இறந்த மாணவன் – சதியா என போலீஸ் விசாரணை

வேலூர் மாவட்டத்தில் நடந்துசென்று கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
வேலூர் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள மதர் தெரசா கல்லூரியில் விடுதியில் தங்கி B, SC பிசியோதெரபி முதலாமாண்டு படித்து வருகிறார் கோகுல்ராஜ். 19 வயதான இவர் இன்று மாலை 05:40 மணியளவில் கல்லூரி முடிந்து மைதானத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்துள்ளார். பின்னால் நடந்து வந்த B. Pharm மூன்றாம் ஆண்டு மாணவர் ராஜேஷ்வரன் மற்றும் சிலரும் கீழே விழுந்த கோகுல்ராஜை உடனடியாக மீட்டு, விசுவநாதன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் வைத்து இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் கூறியுள்ளனர். மேலும் மாணவனின் இடது காதிலிருந்து ரத்தம் வந்திருப்பதால் உடலை பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவனின் இறப்பு தற்செயலானதா அல்லது ஏதேனும் சதி நடந்துள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.