ஆடுதுறை பேரூராட்சி : சிக்கலில் சிக்கிய தேர்தல் அலுவலர் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

 தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் பாமக 4 இடங்களிளும், திமுக 4 இடங்களிளும், அதிமுக 2 இடங்களிளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மதிமுக 1,  சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பேரூராட்சி தலைவராக வேண்டுமெனில் 8 பேரின் ஆதரவு தேவை. பாமக சார்பில் வெற்றி பெற்றுள்ள வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினும், மதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும் களமிறங்கினர். 

இதில், பாமகவின் ம.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8 பேர் ஆதரவு கிடைத்தது. அவரின் வெற்றியும் உறுதியானதால், திமுக கூட்டணியை சேர்ந்த 3 கவுன்சிலர்களை காணவில்லை என திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

பாமக பெரும்பான்மை ஆதரவு பெற்றதால், தேர்தலை நிறுத்த திமுகவினர் நாடகமாடுவதாக பாமவினர் குற்றம் சாட்டி போராட்டம் நடத்திவந்தனர். இதற்கிடையே, ஆடுதுறை பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கக்கூடிய மறைமுகத் தேர்தல் தேர்தலை நடத்தக் கோரி தொடரப்பட்டது. இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் நாளைக்குள் (இன்று) பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில்,  ஆடுதுறை பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காத நிலையில், தேர்தல் அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.