உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ரஷிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸகாரோவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் ஜெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது ரஷ்யாவுக்கு நோக்கமல்ல என தெளிவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் நேட்டோ அமைப்பு படைகளை குவித்தது, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருந்ததாகவும், அதனால் நேட்டோ அமைப்பு உடனான மோதல் போக்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ள அவர், மற்றபடி உக்ரைனில் ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை எனவும், இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்தநாட்டு மக்களுக்கோ எதிரானது இல்லை எனவும் தெளிவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.