டிப்ளமோ படித்தவர்களுக்கு எழுத்தர் பணி ஆணை வழங்கல்| Dinamalar

புதுச்சேரி-டிப்ளமோ படித்து, கீழ்நிலை எழுத்தர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கோர்ட் தீர்ப்பின்படி பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசு துறைகளில் கீழ்நிலை எழுத்தர் (எல்.டி.சி.,) பணியிடங்களை நிரப்ப, கடந்த 2012ல் எழுத்து தேர்வு நடந்தது. இதில், 10ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்தவர்களை பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருத முடியாது என்ற காரணத்தால், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி டிப்ளமோ முடித்தவர்களை பிளஸ் 2 படிப்புக்கு இணையாக கருதி, 9 பேருக்கு கீழ்நிலை எழுத்தர் பதவிக்கான பணி ஆணை வழங்கப் பட்டது.சட்டசபை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கீழ் நிலை எழுத்தர் பணிக்கான ஆணையை 9 பேருக்கு வழங்கினார்.பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் மற்றும் அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.