அதைமட்டும் இனி செய்யவே மாட்டேன் : யாஷிகா

ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் யாஷிகா. அதன் பிறகு ஒருசில படங்களில் நடித்த அவரை
இருட்டு அறையில் முரட்டு குத்து
படம் பிரபலமாகியது.

அதைத்தொடர்ந்து
பிக் பாஸ்
சீசன் 2 வில் போட்டியாளராகவும் பங்கேற்றார் யாஷிகா.

அதன் மூலம் மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். ஓவியாவை போன்று இவருக்கும் ஆர்மி எல்லாம் துவங்கப்பட்டது. அதையடுத்து பிஸியான யாஷிகா படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என கலக்கி வருகிறார்.

தற்சமயம் எஸ்.ஜெ.சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் போன்ற பல படங்களில் நடித்துவருகிறார்.

தனுஷ் செய்றதையே செய்யும் செல்வராகவன்..ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..!

இன்னியலியில் கடந்தாண்டு இவருக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் யாஷிகா படுகாயமடைந்தார். அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட யாஷிகா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

யாஷிகா

ஆரம்பத்தில் நடக்கவே முடியாமல் கஷ்டப்பட்ட யாஷிகா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். மேலும் படப்பிடிப்புகளில் கலந்து வருகிறார். இந்நிலையில் யாஷிகா தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளார்.

அதாவது தன் உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதால் இனி கார் மற்றும் பைக் ஓட்டமாட்டேன் என முடிவெடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வாங்கிய விலையுயர்ந்த பைக் ஒன்றை அவரின் சகோதரரிடம் கொடுத்துவிட்டார்.சமூகத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா தன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் ஈர்த்துவருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

யாஷிகா

இருப்பினும் தனது தோழியின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள யாஷிகா தனது தோழியை பற்றி உருக்கமாக பல போஸ்டுகளை போட்டுவருகிறார். எனவே அவரின் தோழியின் மரணத்தால் கூட யாஷிகா கார் மற்றும் பைக் ஓட்டமாட்டேன் என முடிவெடுத்திருப்பார் என் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.

தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.