இலங்கை பதிவெண் கொண்ட படகு; தமிழக மீனவர்களைக் கண்டதும் தப்பியோடிய மர்ம நபர்கள் – போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதியில் இன்று காலை மர்ம நபர்கள் சிலர் படகில் வந்திருக்கின்றனர். அவர்கள் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கண்டவுடன் படகிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கரை ஒதுங்கிய அந்த படகை பார்த்த மீனவர்கள், அதில் இலங்கை பதிவு எண் இருந்ததைத் தொடர்ந்து, தேவிப்பட்டினம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதிக்குச் சென்றனர். அங்கு மர்ம நபர்கள் விட்டுச் சென்ற இலங்கை பதிவு எண் கொண்ட படகில் தங்கம் அல்லது போதைப்பொருள்கள் ஏதேனும் கடத்தி வந்துள்ளார்களா என சோதனை செய்தனர். ஆனால் படகில் அப்படி எதுவும் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது.

இலங்கை பதிவு எண் கொண்ட படகு

இதுதொடர்பாக தேவிப்பட்டினம் கடலோர காவல் படை போலீஸார் இலங்கை பதிவு எண் கொண்ட இந்த படகில் வந்த மர்ம நபர்கள் யார்? இலங்கையில் இருந்து ஏதேனும் கடத்தி வந்தார்களா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.