“பேயை நம்பினோர் கைவிடப்படார்னு சுந்தர்.சி சார் சொன்னார்!'' – சதீஷ் ஜாலி!

மேடை நாடகம் தொடங்கி, தமிழ் சினிமா வரை தமிழக மக்களுக்குப் பரிட்சயமானவர், சதீஷ். காமெடி நடிகராக இருந்தவர், கடந்த வருடம், `நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்தார். தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். தற்போது, `கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், அவருடன் ஸ்மால் சாட் ! `கான்ஜூரிங் கண்ணப்பன்’ கதை கேட்டவுடன் என்ன தோணுச்சு? “எனக்கு பேய்ப் படங்கள்னா எப்போவும் பிடிக்கும். தமிழ் மட்டுமல்ல எந்த மொழியா இருந்தாலும் பேய்ப் படம்னா தியேட்டருக்குப் … Read more

Doctor Vikatan: ஏசி குளிர்ச்சிக்குப் பழகிவிட்ட உடல்… குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா?

Doctor Vikatan: எனக்கு வேலையிடத்தில் ஏசியில் இருந்து பழகிவிட்டது. அதன் காரணமாக வீட்டிலும் அதே குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது. குளிர்காலத்திலும் ஏ.சி அறையில் உறங்குவது நல்லதா…  ஏ.சி இல்லாமல் உறக்கம் வருவதில்லை. என்ன செய்யலாம்?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.      மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை… அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா? ஏசி செய்யப்பட்ட சூழல்களால் சில பிரச்னைகள் வரக்கூடும்.  அதாவது, ஏசியானது அந்தச் சூழலை வறட்சியாக்கி, … Read more

திருவள்ளூர்: `போலீஸ்கிட்ட போனால் போட்டுத் தள்ளிடுவோம்’ – பேக்கரியில் மிரட்டிப் பணம் பறித்த ரௌடிகள்!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடையொன்றில், பட்டாக் கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிச்செல்லும் ரௌடிகளின் மிரட்டல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, பதைபதைக்க வைத்திருக்கின்றன. கடந்த ஏழாம் தேதி இரவு 9:30 மணியளவில், இந்த அட்டூழியம் நடந்தேறியிருக்கிறது. சி.சி.டி.வி காட்சியைப் பார்க்கும்போது, ரௌடி கும்பலைச் சேர்ந்த இருவர் முதலில் கடைக்கு வருகிறார்கள். கடை உரிமையாளரின் மனைவியும், வேலையாள் ஒருவர் மட்டுமே அந்நேரத்தில் கடையில் இருந்திருக்கிறார்கள். ரௌடிகள் பெண்ணை கூப்பிட்டு, ‘அக்கா ஆயிரம் ரூபாய் … Read more

நெல்லை: பள்ளியின் கழிவறை அடைப்பை சரி செய்த பட்டியலின மாணவன்; தலைமை ஆசிரியைமீது வழக்கு பதிவு!

திருநெல்வேலி அருகேயுள்ள மானூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத் தம்பதியின் 8 வயது மகன், ஊராட்சித் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி பள்ளியிலுள்ள கழிவறைக் கோப்பைக்குள் கல் ஒன்று அடைத்தவாறு கிடந்துள்ளது. இதைப் பார்த்த தலைமை ஆசிரியை பொன்ராணி என்பவர், பட்டியலின மாணவனை அழைத்துள்ளார்.  மானூர் காவல் நிலையம் பின்னர், அவனிடம்  ”நீ தூய்மைப் பணியாளர் மகன்தானே… உனக்கு அடைப்பை எடுக்க தெரியும். கழிவறைக்குள் கையை விட்டு கல்லை எடுத்து … Read more

“கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" – விளாசும் செல்லூர் ராஜூ

“கமல்ஹாசன் தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசினால், இனிமேல் அவர் ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் அவரைவிட்டு விலகிவிடுவார்கள். அவர் நிழல்கூட அவருடன் இருக்காது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். கமல் மதுரையில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாள்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கையாக அனைத்துயும் … Read more

வயதில் மூத்த பெண்ணுடன் திருமணம்… தாம்பத்திய உறவை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -126

தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை, ஓர் ஆண் திருமணம் செய்துகொள்வது அறிவியலில் வளர்ந்த இன்றைய சமூகத்திலும் பேசுபொருளாகவே இருக்கிறது. ஆனால், தன்னைவிட பத்து, பதினைந்து வயது மூத்த ஆணை, ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால் ‘இது நார்மல்தானே…’ என்று இன்றைய சமூகமும் கடந்து விடுகிறது. கல்வியறிவில் பின்தங்கிய குடும்பங்களிலோ ‘வயசுல மூத்தபொண்ணை கட்டிக்கிட்டா ஆயுசு குறைஞ்சிடும்’ என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியையே இன்றைய கட்டுரையில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அவர்கள் இருவருமே 30 … Read more

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஷாம்பூ; Flipkart நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

‘Big Billion day Sale’ எனும் Flipkart-ன் வருடாந்திர சிறப்பு ஆன்லைன் விற்பனை திட்டத் தினங்களில், தன்னிடம் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மிகப் பெரிய அளவில் தள்ளுபடிகளை வழங்கி விற்பனை செய்வது e-commerce நிறுவனமான Flipkart- நிறுவனத்தின் வழக்கமாகும். இந்த நிலையில் சமீபத்தில் Flipkart-ன் ‘Big Billion day Sale’-ன்போது, பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் Flipkart -ல் ஷாம்பூ ஒன்றை வங்கியிருக்கிறார். ஃப்ளிப்கார்ட் | Flipkart ஆனால், அவர் வாங்கிய ஷாம்புவிற்கு, அதன் சில்லறை விற்பனை … Read more

Redin Kingsley: `இது பல வருடக் காதல்!' – ரெடின் கிங்ஸ்லி – சிரீயல் நடிகை சங்கீதா திருமணம்

நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரெடின் கிங்ஸ்லி. இதையடுத்து ‘எல்கேஜி’, ‘கூர்கா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விஜய்யின் ‘பிஸ்ட்’, ரஜினியின் ‘ஜெயிலர்’ எனப் பல படங்களில் நடித்து கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி, தான் நீண்ட நாள் காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நண்பர்கள், உறவினர்கள் சூழ மைசூரில் … Read more

எதிர்க்கட்சி என நினைத்து, சொந்த கட்சி நிர்வாகிக்கு அடி, உதை… காயமடைந்தவர் CPM-ஐ விட்டு விலகல்!

கேரள மாநிலத்தில், சி.பி.எம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார். ‘நவகேரளா சதஸ்’ என்ற பெயரில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சொகுசு பேருந்தில் மக்களை சந்திக்க ஒவ்வொரு மாவட்டமாகச் சென்றுவருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் மூலம் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் முதல்வரும், அமைச்சர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் … Read more

61 வயது கணவரைத் தீ வைத்து எரித்த மனைவி; பென்ஷன் பணத்துக்காக நடந்த கொடூரம்!

மும்பை அருகிலுள்ள கல்யான் என்ற இடத்தில் வசிப்பவர் சிவாஜி பாட்டீல் (61). அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். ஓய்வூதியம் தொடர்பாக சிவாஜிக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு திடீரென பாட்டீலுக்கு வீட்டில் தீக்காயம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “என்னுடைய மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி ஓய்வூதியம் தொடர்பாக சண்டை ஏற்படுவது … Read more