எதற்கும் துணிந்தவன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான விவரம்..!

சூர்யா
நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். என்னதான் அவரது முந்தைய படங்களான சூரரைப் போற்று,
ஜெய் பீம்
ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றாலும் அப்படங்கள்
OTT
யில் வெளியானது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு பிறகு சூர்யாவின் படம் திரையில் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் திரையரங்கை திருவிழா நடக்கும் இடமாக மாற்றினார்கள். அதிகாலை 4 மணி காட்சிக்கு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்து போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடினார்கள்.

சூர்யாவிற்கு விஜய் மேல அப்படி என்ன கோபம் ? சூர்யாவின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

கமர்ஷியல் மாஸ் படமாக உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகின்றது. சூர்யாவின் நடிப்பு, சண்டை காட்சிகள், இன்றோ காட்சிகள் என அனைத்தும் அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

சூர்யா

மேலும் சூர்யாவுடன் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணனும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் பாண்டிராஜின் வழக்கமான திரைக்கதையில் அசத்தலான உருவான படம் தான் எதற்கும் துணிந்தவன் என்று ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை
பாண்டிராஜ்
கூறியிருப்பதால் விமர்சகர்கள் பாராட்டையும் பெற்றுவருகின்றது.நேற்று வெளியான இப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

எதற்கும் துணிந்தவன்

முதல் நாளில் மட்டும் எதற்கும் துணிந்தவன் படம் தமிழகத்தில் 7 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் குடும்பம் சார்ந்த படமென்பதால் வாரஇறுதி நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.