கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கும் – ஐஎம்எப்

இந்தியாவில் நிதி நிர்வாகம் சிறப்பாக உள்ளதாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதைப் பாதிக்கும் என்றும் பன்னாட்டுப் பண நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்ச் சூழலில் உலக அளவிலான பொருளாதாரத்தின் தாக்கம் குறித்துப் பன்னாட்டுப் பண நிதியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நிதியத்தின் துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத், இந்தியா எரியாற்றல் தேவைக்குப் பெரிதும் இறக்குமதியைச் சார்ந்துள்ளதாகவும், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.