'ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்க காரணம் இதுதான்" – பிரதமர் மோடி விளக்கம்

”இந்தியாவின் பல தேவைகள் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.  

ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதன் காரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ”ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சனைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது. பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் அரசியல் ரீதியாக போரில் ஈடுபட்ட நாடுகளுடன் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது. இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

image
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து பலமுறை ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இதையும் படிக்கலாம்: உக்ரைனில் மனதை வென்ற 11 வயது சிறுவன் – கண்ணீர் மல்க நன்றி கூறிய தாய்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.