இந்தியாவில் புதிதாக 3,614 பேருக்கு கொரோனா

புதுடெல்லி:

கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 4 ஆயிரத்திற்குள் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 8-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 3,993 ஆக இருந்தது. இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்றைய பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 87 ஆயிரத்து 875 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 73 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 89 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்தபலி எண்ணிக்கை 5,15,803 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,43,750, கேரளாவில் 66,762 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 5,185 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 31 ஆயிரத்து 513 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 40,559 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 1,660 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 18,18,511 டோஸ்களும், இதுவரை 179 கோடியே 91 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 77.77 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 8,21,122 மாதிரிகள் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.