'மாறன்' படத்துல என்னதான் பஞ்சாயத்து..?: சர்ச்சைகளை கிளப்பிய கார்த்தி நரேனின் பதிவு..!

கார்த்திக் நரேன்
இயக்கத்தில்
தனுஷ்
நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘
மாறன்
‘. நேற்று மாலை ஐந்து மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘மாறன்’ படம் பலவிதமான எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் தனுஷ்,
மாளவிகா மோகனன்
நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘மாறன்’ படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

நேர்மையான பத்திரிக்கையாளராக இருந்து குழந்தைகளின் இறப்பிற்கு காரணமானவர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததால் தனுஷின் அப்பாவான ராம்கியை கொன்று விடுகின்றனர். இரண்டாவது பிரசவத்தின்போது தனுஷின் அம்மாவும் இறந்து விடுகிறார். பின்பு தன் தங்கையை தானே வளர்க்கிறார் தனுஷ். அப்பாவைப் போலவே தனுசும் நேர்மையான பத்திரிகையாளராக இருக்கிறார்.

விவாகரத்திற்கு பிறகு மகளுடன் நடந்த பாச போராட்டம்: வைரலாகும் பாலாவின் வீடியோ..!

இதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தனுஷ் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே ‘மாறன்’ படத்தின் கதை. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அதர பழசான ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திறமையை கார்த்திக் நரேன் ஒட்டுமொத்தமாக வீணாக்கிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

‘மாறன்’ படம் பலவிதமான எதிர்மறை விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் ’உண்மையை அப்புறம் சொல்றேன்’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு நீக்கியுள்ளார் கார்த்திக் நரேன். ஏற்கனவே ‘மாறன்’ படப்பிடிப்பின் போது திடீரென கார்த்திக் நரேன் விலகி விட்டதாகவும் தனுஷே மீதி படத்தை இயக்குகிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது. இந்நிலையில் கார்த்திக் நரேன் டெலிட் செய்துள்ள பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பலவித கேள்விகளை உருவாக்கியுள்ளது.

“எதற்கும் துணிந்தவன்” சூர்யா ரசிகர்களின் ரியாக்சன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.