முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. கடலூர் அருகே பரபரப்பு..!

முன்விரோதத்தால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் அபிஷேக் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஊருக்கு வந்த அவர் சம்பவத்தன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார் அதன் பின் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட னர். அப்போது அந்த செல் மறுமுனையில் பேசிய நபர் அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே அவரது செல்போன் இருந்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினரும் பெற்றோரும் அங்கு விரைந்தனர்.

அந்த கிணற்றில் அபி சுந்தர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா அவருக்கு முன் விரோதம் இருந்தது தெரியவந்தது .

இதனால் தனியாக வந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து பின் அவரை திருச்சி விசிடி காவல்துறை விசாரணையில் தெரியவந்தது .இதனை அடுத்து இளையராஜா அண்ணாதுரை பாண்டி மணிமேகலை பெரியம்மாள் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.