நடிகையுடனான காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்? வைரலாகும் பதிவு!

நடிகர் கார்த்திக்கின் மகனான
கவுதம் கார்த்திக்
மணி ரத்னத்தின் கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்து ராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்திருந்தார் கவுதம் கார்த்திக். இந்நிலையில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோனுடன் கவுதம் கார்த்திக் காதல் உறவில் இருப்பதாக தகவல் பரவியது.

மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று றெக்கை கட்டி பறந்து வருகிறது. இந்நிலையில் நடிகை
மஞ்சிமா மோகன்
கடந்த சனிக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு சமூக வலைதளத்தில் அவரை வாழ்த்தியுள்ளார் நடிகர் கவுதம் கார்த்திக். அந்த வாழ்த்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதிப்படுத்துவதைப் போல் பதிவிட்டுள்ளார் கவுதம் கார்த்திக்.

அவர் பதிவிட்டிருப்பதாவது, எப்போதாவது நான் நன்றியுள்ளவனாக இருந்திருந்தால், என் வாழ்க்கையில் உங்களைப் போன்ற ஒரு அற்புதமான மற்றும் வலிமையான நபர் எனக்கு இருக்கிறார் என்பதே உண்மை! எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வாதத்துடன் இருங்கள்! என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ எல்லாம் உண்மைதானா ப்ரோ.. என்று கேட்டு வருகின்றனர். மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் தங்களின் பெற்றோரிடம் தங்களின் காதல் குறித்து பேசி திருமணத்திற்கு பர்மிஷன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரு குடும்பத்தினரும் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.