மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மேலூரில் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பாரதி

பாலியல் வன்கொடுமையால் சிறுமிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன.

கடந்த வாரம் 17 வயது சிறுமி காதலனால் கடத்திச் செல்லப்பட்டு ஊர் திரும்பிய நிலையில், மர்மமாக மரணமடைந்த சம்பவம் இந்த வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

போக்சோ

இந்த நிலையில், பள்ளி மாணவிகள் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் பாரதி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமிக்கு தகவல் வர, அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆசிரியர் பாரதி

புகாரை விசாரித்த மேலூர் மகளிர் காவல்துறையினர் பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாரதியைக் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தற்போது மாவட்ட குழந்தைகள் நல அலுவலகர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.