வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு, மாவட்ட அளவில் நடவடிக்கை – மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் விளக்கம்

புதுடெல்லி:
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அளித்து பதிலில் தெரிவித்துள்ளதாவது:
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த மாநிலம் மற்றும் மாவட்ட நிலைகளில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
பல மாநிலங்களில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான தொடர்பு முகமைகளும் பகுதி வாரியான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி வாய்ப்புகளை மதிப்பீடு செய்யவும், கண்டறியவும், வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களில் காணொலி காட்சி மூலம் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.  
அதே போல் வாங்குவோர் விற்போர் இடையே சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 
அதிக வாய்ப்புள்ள திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, வெங்காயம், அரிசி உள்பட 8 விளை பொருட்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.