மாணவர்களுக்கான  உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் விரிவு

வெசாக் தினத்தை தொடர்ந்து வருகின்ற தினத்தை தேசிய உளவிழிப்புணர்வு தினமாக அனுட்டிப்பதற்கும், வெசாக் வாரத்திற்கு இணையாக ‘வெசாக் வாரத்தில் உளவிழிப்புணர்வு தேசத்தை நோக்கி” எனும் பெயரிலான வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் நடைமுறைப்படுத்துவதற்கும்

2024 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மே மாத ஆரம்பத்தில் “சர்வதேச உளவிழிப்புணர்வு மாநாடு” நடாத்துவதற்கும்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 

இது தொடர்பாக 25.04.2024 அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 

62. பாடசாலை மாணவர்களுக்கான நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற உளவிழிப்புணர்வு (Mindfulness) பயிற்சி வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தல் 

பாடசாலை மாணவர்களின் மனங்களில் ஏற்படுகின்ற தொடர்ச்சியாக ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களை இல்லாது செய்து மன அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக 2024.12.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் குறித்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக வெசாக் தினத்தை தொடர்ந்து வருகின்ற தினத்தை தேசிய உளவிழிப்புணர்வு தினமாக அனுட்டிப்பதற்கும், வெசாக் வாரத்திற்கு இணையாக ‘வெசாக் வாரத்தில் உளவிழிப்புணர்வு தேசத்தை நோக்கி” எனும் பெயரிலான வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் நடைமுறைப்படுத்துவதற்கும். 20024 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மே மாத ஆரம்பத்தில் “சர்வதேச உளவிழிப்புணர்வு மாநாடு” நடாத்துவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.