இது போதும் அண்ணி: ஐஸ்வர்யாவால் துள்ளிக் குதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் மனம் மாறியபாடில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக தன் அப்பா ரஜினியின் கோபத்தை பார்த்து பயந்து தனுஷுடன் மீண்டும் சேர முயற்சி செய்தார் ஐஸ்வர்யா. தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவுடன் சேர்ந்து அவர் ஒரு பிளான் போட்டார். ஆனால்
தனுஷ்
ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தான் நடித்த
மாறன்
பட ரிலீஸ் குறித்து ட்வீட் செய்தார் தனுஷ். அந்த ட்வீட்டை ஐஸ்வர்யா லைக் செய்திருக்கிறார்.

இதன் மூலம் தனுஷ் மீதான கோபம் மாறி அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ ஐஸ்வர்யா தயாராகிவிட்டதாக ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டனர்.

தனுஷை பிரிந்து வாழ்ந்தாலும் சமூக வலைதள கணக்குகளில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷ் பெயரை அவர் இதுவரை நீக்கவில்லை. அதுவும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.

இதற்கிடையே ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் பாடல் வீடியோ நாளை வெளியாகவிருக்கிறது.

நல்ல செய்தி சொன்ன ஐஸ்வர்யா: ‘அந்த’ பயத்தில் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.