ப்பா… வேற லெவல்… 3 நாட்களில் கோடிகளை அள்ளிக்குவித்த ஆர்ஆர்ஆர்!

எஸ்எஸ் ராஜமவுலி
இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்திருந்தார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பேன் இந்தியா படமாக இப்படம் வெளியானது. மேலும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் 240 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் 3 நாட்களில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. பிரபல பாலிவுட்டி திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷ் இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

எஸ்எஸ் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்திய சினிமாவை மீண்மும் ஒளிரடச செய்துள்ளதாக தெரிவித்துள்ள தரன் ஆதர்ஷ், விடுமுறை நாட்களில் ரிலீஸ் செய்யப்படாமலேயே ஆர்ஆர்ஆர் படம் இத்தனை கோடிகளை குவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்திவாழ்ந்தா இப்படி வாழணும்… வனிதா அக்காவை பார்த்து பொறாமையில் பொங்கும் ரசிகாஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.