மது குடிக்க செலவுக்கு பணம் தர மறுத்த தாயை எரித்து கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை

மது குடிக்க செலவுக்கு பணம் தர மறுத்த தாயை மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை செய்த மகனுக்கு 40 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கி புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்னவாசல் அருகிலுள்ள மருதான்தலை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டில் பணம் தர மறுத்த தாய் லீலாவதியை உயிருடன் எரித்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டான்.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் காதர், சந்தோஷ்குமாருக்கு 40 ஆண்டுகால சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அபாராத தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 2 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, செய்த தவறை உணர தண்டனையின் முதல் 3 மாத காலத்தை சந்தோஷ்குமாரை தனிமை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.