குஜராத் காங்கிரஸ் தலைவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு – மனைவி சரமாரி புகார்

குஜராத் காங்கிரஸ் தலைவர் சோலங்கி குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார் அவரது மனைவி.

குஜராத் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பாரத்சிங் சோலங்கிக்கு எதிராக அவரது மனைவி ரேஷ்மா படேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாரத்சிங் சோலங்கி குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும், வேறொரு பெண்ணுடன் அவர் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ரேஷ்மா படேல்.

image
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு  ரேஷ்மா படேல் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் கட்சிக்கார பெண் ஒருவருடன் சோலங்கி திருமணத்தை மீறிய உறவு கொண்டிருப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வீட்டை விட்டு அவர் துரத்திவிட்டதாகவும் ரேஷ்மா படேல் குறிப்பிட்டிருந்தார். சோலங்கி தனது அரசியல் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் ரேஷ்மா அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். மேலும் சோலங்கியை விவகாரத்து செய்ய விரும்பவில்லை என்றும்  ரேஷ்மா படேல் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: தேநீர்க்கடை, பிரியாணிக்கடையில் தாக்குதல் – திமுக பிரமுகர்கள் 2 பேர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.