28 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…!

நடிகை சாந்தி ப்ரியா 28 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில்
ரீஎன்ட்ரி
கொடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஷாந்தி என்ற பெயருடன் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஷாந்தி.

இவர், நடிகை பானுப்ரியாவின் உடன்பிறந்த சகோதரி தான். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது . முதல் படம் சூப்பர் ஹிட் என்பதால் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திடீரென நிஷாந்தி என்ற வலம் வந்த பெயரை மாற்றி
சாந்திப்ரியா
என்ற இயற்பெயரில் நடிக்கத் துவங்கினார்.

அதை மட்டும் செஞ்சிடாதிங்க நெல்சன்…கதறும் விஜய் ரசிகர்கள்..!

தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வந்தார். காலப்போக்கில் அவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவவே சினிமாவை விட்டு விலகினார். தற்போது மீண்டும் திரைத்துறைக்கு ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும்
சரோஜினி
நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் சாந்தி பிரியா நடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார் .

“இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நமது இந்திய வரலாற்றில் உலகம் பெருமையுடன் அழைக்கும் பெண்ணின் பாத்திரத்திற்கு நியாயம் செய்ய கடினமாக முயற்சி செய்வேன்.

தனிப்பட்ட முறையில் பேசினால், ஒரு நடிகையாக நான் இன்னும் என்னென்ன முக்கிய வேடங்களில் நடிக்க முடியும் என்பதை உங்களுக்கு காண்பிக்க நான் ஆவலாக உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

அடுத்த செய்திநயன்தாராவின் ராக்கி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.