போலீசாரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு கோவிலுக்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது… யோகி ஆதித்யநாத் தலைமை மதகுருவாக உள்ள கோவிலில் சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் போலீசாரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு கோவிலுக்குள் நுழைய முயன்ற இளைஞரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமை மதகுருவாக உள்ள கோரக்நாத் கோவில் அருகில் இரு காவலர்களை அரிவாளால் தாக்கிய இளைஞர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் இளைஞரை மடக்கிப் பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் கைதானவர், அஹமத் முர்தஸா அப்பாஸி என்றும், மும்பை ஐ.ஐ.டி. கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்றும் தெரிய வந்ததாக போலீசார் கூறினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.