இரவில் மிருகமாகும் பொல்லாத குடும்பம் போக்சோவில் கைது..! தத்து எடுத்து அத்துமீறல்..!

சென்னையில் பெண் குழந்தை இல்லையென தத்தெடுத்து வளர்த்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் ஒரு குடும்பத்தையே போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 64 வயது முதல் 24 வயது வரையிலான உறவுகள் இரவில் மிருகமான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பெண் குழந்தை இல்லை என்று தத்துக் கொடுத்த வீட்டில் இருந்து தப்பி வந்த 17 வயதான தனது தங்கையை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற பெண் ஒருவர் ,பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில் சிறுவயதிலேயே தங்களது பெற்றோர் இறந்து விட்ட நிலையில் தானும் பச்சிளம் குழந்தையான தனது தங்கையும் ஆதரவற்ற நிலையில் உறவினர்கள் பராமரிப்பில் இருந்ததாகவும், அதே பகுதியில் வசித்து வந்த ஷெரிப் மற்றும் ஜமீலா தம்பதியினர் தங்களுக்கு பெண் குழந்தை இல்லை எனக்கூறி பச்சிளம் குழந்தையான தனது தங்கையை தத்து எடுத்து வளர்க்க விரும்பியதால் அவர்களிடம் தத்துக்கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த 17 வருடங்களாக தனது தங்கையை அந்த தம்பதி வளர்த்து வந்த நிலையில் 17 வயதான தனது தங்கை தற்போது தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி தனது தங்கை அழுதுகொண்டே தன்னை தொடர்பு கொண்டு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்றை தெரிவித்த தாக கூறி உள்ள அந்த பெண். வளர்ப்பு தந்தையான ஷெரிப் மற்றும் அவரது மகன்களான இம்தியாஸ், இர்பான் மற்றும் அனீப் ஆகியோர் பகலில் உறவுமுறையில் பழகினாலும், தினமும் இரவு நேரத்தில் வலுக்கட்டாயமாக தனது தங்கையிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், இது குறித்து தனது வளர்ப்புத்தாயிடம் தெரிவித்தால் அவர் அத்துமீறல்களை கண்டு கொள்வதில்லை என்றும் தங்கை தன்னிடம் வேதனை தெரிவித்ததாக கூறி உள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் அனைவரும் தனது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக தெரிவித்துள்ள அவர், ஒரு கட்டத்தில் இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தனது தங்கை வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பகலில் பழகும் உறவுகள் இரவில் மிருகமான கொடுமை குறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வளர்ப்பு மகள் என்றும் பாராமல் 17 வயது சிறுமியிடம் 64 வயது வளர்ப்புத்தந்தை மற்றும் 3 சகோதரர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அதற்கு வளர்ப்புத்தாய் ஜமீலா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து ஷெரீப், ஜமீலா , இவர்களது மகன்களான இர்பான், இம்தியாஸ் , 24 வயதான அனீப் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் அனீப் தவிர 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவான அனீப்பை தேடிவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.