காதல் தோல்வி காரணமாக இளம்பெண் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொள்ளும் வீடியோ.!

காதல்தோல்வி காரணமாக இளம்பெண் ஒருவர், ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது. எஸ்.ஆர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகரை சேர்ந்த ஷபானா நேற்று மாலை அதே பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து கீழே குதித்தார்.

படுகாயமடைந்த ஷபானாவை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வி காரணமாக ஷபானா தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.