ரஷ்யா மீதும் புதினின் மகள்களைக் குறிவைத்தும் புதிய பொருளாதாரத் தடைகள்

ரஷ்யா மீது அமெரிக்கா, ஜி 7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புதிய தடைகளை அறிவித்துள்ளன.

ரஷ்யாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான ஸ்பர் பேங்க், ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் வங்கி ஆல்பா பேங்க் ஆகியவற்றின் மீதும் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவில் புதிய முதலீடுகள் நிறுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் மகள்கள் மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா. ஆகியோரை குறிவைத்து புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. புதினின் மகள்களுடன், ரஷிய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களும் அமெரிக்காவின் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.