இரண்டு தலை நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக் குட்டி – எங்கே தெரியுமா?

நாகர்கோவில் அருகே இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக் குட்டியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சமுத்திரம் – சுசீலா தம்பதியினர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், இவர்கள் பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வரும் நிலையில், இன்று இவர்கள் வளர்த்துவரும் மாடு கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது.
image
அந்த கன்றுக் குட்டிக்கு வழக்கத்திற்கு மாறாக இரண்டு தலை, நான்கு கண்களுடன் காணப்பட்டது. இதைக்கண்ட அந்த தம்பதியர் ஆச்சர்யம் அடைந்த நிலையில், அப்பகுதி மக்களுக்கும் இந்த தகவல் பரவியது. இதையடுத்து அந்த கன்றுக் குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.