குருவிக் கூண்டுக்குள் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு.. குருவிக்கு தீனி போடச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மரக்காணத்தில் சாதிக் என்பவரின் வீட்டில் உள்ள குருவி கூண்டுக்குள் நல்ல பாம்பு புகுந்து படமெடுத்து ஆடியது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பங்களா தெரு பகுதியில் வசித்து வரும் சாதிக் என்பவர், தனது வீட்டில் சிட்டுக்குருவி வளர்த்து வருகிறார்.

இன்று மதியம் சிட்டுக் குருவிக்கு தீனி போடுவதற்காக கூண்டை திறந்தபோது, கூண்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக, அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் விரைந்து வந்து, நல்ல பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.