வாணவேடிக்கை காட்டிய உத்தப்பா ,ஷிவம் துபே – சென்னை அணி 216 ரன்கள் குவிப்பு

மும்பை,
இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா ,ஷிவம்  துபே இருவரும்  நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் உத்தப்பா ,மறுபுறம் ஷிவம் துபே பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர் .
அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த  இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு உத்தப்பா ,ஷிவம் துபே இருவரும் ,பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் 
இதனால் இறுதியில் சென்னை அணி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது .உத்தப்பா 50 பந்துகளில்  ( 4 பவுண்டரி , 9 சிக்ஸர் ) என 88 ரன்களும் ,ஷிவம் துபே 46 பந்துகளில் ( 5 பவுண்டரி ,8 சிக்ஸர் ) என 95  ரன்களும் எடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.