இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2- வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி லண்டன் … Read more

மாங்கனி திருவிழா: காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று காலை பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்வான மாங்கனி இறைத்தல் நாளை (10.7.2025) நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வரும்போது பொதுமக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் அருந்து மாங்கனிகளை பிச்சாடனரை … Read more

காதலன் கொடுத்த முத்தத்தால் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை – குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த கோர்ட்டு

லாசானே, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பிரான்ஸ் வாள்வீச்சு வீராங்கனை யசாவ்ரா திபஸ் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அவரது காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன் முத்தமிட்டபோது எச்சில் மூலம் ‘ஆஸ்டரின்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து அவரது உடலுக்குள் புகுந்து புத்துணர்ச்சி கொடுத்ததாக உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றம் சாட்டியது. ஆனால் இந்த புகாரில் இருந்து அவரை சர்வதேச வாள்வீச்சு சம்மேளனத்தின் ஒழுங்கு கமிட்டி விடுவித்தது. இதனால் பாரீஸ் … Read more

மீண்டும் வேலைக்குத் திரும்பிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

லண்டன், கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பதவி விலகியபோது, அந்நாட்டின் பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை கடந்தாண்டு ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.பி.யாக தொடர்கிறார். … Read more

பாஜக அறிவுறுத்தல்படி செயல்படுகிறது: தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

பாட்னா, பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட சபை தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, அங்கு மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாபந்தன் கூட்டணி சார்பில் பிகார் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் … Read more

மகளிர் கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்-அயர்லாந்து அணி அறிவிப்பு

டப்ளின், ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து ஒருநாள் அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா … Read more

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.32 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.72 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,69.80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இரண்டாவது முறையாக … Read more

சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து: அருணாசல பிரதேச முதல் மந்திரி

பெய்ஜிங், திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது. உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவில் யாங்சே … Read more

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் காலமானார்

மெல்போர்ன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (வயது 87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். 1959-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், மிகவும் வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் ஆகும். அதன்பின்னர், ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து … Read more

இணையசேவை இல்லாமலே சாட் செய்யலாம்: புதிய 'பிட்சாட்' செயலி அறிமுகம்

உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்மார்ட் போன்ககள் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்க தொடங்கியது முதல் சமூக வலைத்தளங்களும் செல்போன்களை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. ட்விட்டர் (தற்போது எக்ஸ்) , பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற செயலிகள் இல்லாத ஸ்மார்ட்போன்களை பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இணைய வசதி மூலமாக இந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள், இதன் மூலம் அழைப்புகளும் மெசேஜ்களும் அனுப்ப முடியும். … Read more