மராட்டியத்தில் ரெயில் விபத்து – ராகுல் காந்தி இரங்கல்

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் இன்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரெயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், … Read more

பந்துவீச்சாளர்களை பாராட்டிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

கொல்கத்தா, பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி; நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைப்பு

மெக்சிகோ சிட்டி, அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார். அதில் குறிப்பாக அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்போவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த … Read more

'டெல்லிக்கு தேவை உண்மையான வளர்ச்சி; போலி பிரசாரங்கள் அல்ல' – ராகுல் காந்தி

புதுடெல்லி, 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், டெல்லிக்கு தற்போது உண்மையான வளர்ச்சி தேவை என்றும், போலியான பிரசாரங்கள் தேவையில்லை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி

பெங்களூரு , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூருவில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு – ஒடிசா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்று … Read more

பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை: ஜெய்சங்கர்

வாஷிங்டன், அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற எஸ்.ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ளார். அங்கு ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை இந்தியா தொடங்குகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் வர்த்தகம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் … Read more

மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக வீடுகளில் கொள்ளையடித்த நபர்

புதுடெல்லி, உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் … Read more

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: சிந்து தோல்வி; லட்சயா சென் வெற்றி

ஜகர்த்தா, இந்தோனேசியாவில் இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சிந்து, வியட்நாமை சேர்ந்த குயென் துய் லின் என்பவருடன் நேற்று விளையாடினார். 37 நிமிடங்கள் நடந்த முதல் சுற்று போட்டியில் 22-20, 21-12 என்ற புள்ளி கணக்கில் தோற்று போட்டியில் இருந்து … Read more

லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்த தீயில் உயிரிழந்துள்ளனர். 12,000 கட்டிடங்கள் உள்பட பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். 163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தீக்கிரையானது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.17,29,581 கோடி) அதிகமான பொருட்கள் சேதமடைந்தது. இந்நிலையில், சற்றே தணிந்த காட்டுத்தீ தற்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் … Read more

சத்தீஷ்கார்: குடியரசு தின விழாவில் பங்கேற்க 'பைகா' பழங்குடியின குடும்பங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கவர்தா பகுதியில் ‘பைகா’ பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சத்தீஷ்காரில் உள்ள பைகா பழங்குடியினத்தை சேர்ந்த 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடியரசு தின விழாவில் … Read more