ஏற்றத்தாழ்வுகள் பார்க்கிறதா பிசிசிஐ? உண்மையை உடைத்த நடராஜன்

சென்னை, இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிசிசிஐ எனக்கு … Read more

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

தம்புல்லா, 9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் … Read more

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் … Read more

கர்நாடக நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன்(56), சரவணன்(34), முருகன் ஆகிய 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் தொடர்ச்சியாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் சின்னண்ணன்(56), முருகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சரவணன் என்ற ஓட்டுநரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மண் குவியலில் இருந்து நபர் … Read more

இந்திய அணி ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும்? பாக். முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் பதிலடி

மும்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் … Read more

எச்.ஐ.வி. தொற்றுக்கு புதிய மருந்து; தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

கேப் டவுன், உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. தொற்று பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஆய்வாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி. தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 100 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை (6 … Read more

கார்கில் வெற்றி தினம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை

லடாக், கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கிலில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர்த்தியாகம் பல செய்து பாகிஸ்தான் படையினரை நமது இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர். கார்கில் போர் வெற்றி தினத்தை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்கில் போர் … Read more

அந்த இந்திய வீரரை பார்த்து மொத்த பாகிஸ்தான் அணியே பயப்படும் – பாசித் அலி

லாகூர், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட்டில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது வாசிம் அக்ரம் கிளென் மெக்ராத், அக்தர், போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். குறிப்பாக சச்சின் அடித்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற சூழ்நிலை இருந்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்தளவுக்கு எதிரணிகளுக்கு சிம்ம … Read more

பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு

மணிலா, பிலிப்பைன்சின் படான் மாகாணத்தில் இருந்து இலோய்கா நகருக்கு டெர்ரா நோவா என்ற எண்ணெய் கப்பல் புறப்பட்டது. தலைநகர் மணிலா அருகே சென்றபோது எழும்பிய ராட்சத அலை அந்த கப்பலை தாக்கியது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் சேதமடைந்த அந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது அந்த கப்பலில் இருந்த 16 பணியாளர்களை அவர்கள் மீட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அந்த கப்பலை மீட்டு கரைக்கு கொண்டு … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்

லக்னோ கடந்த 2018-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ந்தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக … Read more