பிரப்சிம்ரன், பேர்ஸ்டோ, ஷசாந்த் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றி

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா தொடக்க வீரர்களாக பில் சால்ட், சுனில் நரைன் களமிறங்கினர். இருவரும் பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71 ரன்களில் அவுட் ஆனார். சால்ட் 75 ரன்களில் … Read more

உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் பெட்ரிக் … Read more

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி – இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

திருவனந்தபுரம், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “மகேந்திரகிரியில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதிக்கட்ட பி.எஸ்.4 எஞ்சின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகள் துல்லியமாக கிடைத்துள்ளன. எஞ்சின் பாகங்கள் உறுதியாக இருக்கின்றன. ராக்கெட்டின் எடையை குறைக்கும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார். … Read more

ஒலிம்பிக்கில் வெற்றி வாகை சூட நேத்ராவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க நேத்ரா குமணன் தகுதி பெற்றதாக, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நேத்ரா குமணன் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கிலும் தகுதி பெற்றதன் மூலம் இரு ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்ற ஒரே வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார்.. தினத்தந்தி Related … Read more

ஹைதி பிரதமர் பதவி விலகல்

மெக்சிகோ சிட்டி, கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதிக்குள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பிப்ரவரி … Read more

'மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான யுத்தம் நிற்காது' – அகிலேஷ் யாதவ்

புதுடெல்லி, நாடு முழுவதும் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கினை வி.வி.பாட் மூலம் சரிபார்க்க முடியும். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வி.வி.பாட் சீட்டுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் … Read more

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேர்ஸ்டோ அபார சதம்

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை … Read more

ஓராண்டுக்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு

பஹ்ரைன்: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைகன் கென்னகம் (வயது 31). மாடல் அழகியான இவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் வந்து ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்த அவர், பஹ்ரைனில் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாகவும் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார். சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை நிறுத்தினார். அதன்பின்னர் அவரை அவரது குடும்பத்தினரால் எந்த … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்தனர். இதன்படி பயங்கரவாத தாக்குதல் அல்லது அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அண்மையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது … Read more

ஐ.பி.எல் : அதிரடியில் மிரட்டிய நரைன் , பில் சால்ட்…கொல்கத்தா அணி 261 ரன்கள் குவிப்பு

கொல்கத்தா, 10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க … Read more