கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த 5 மாடி கட்டிடம் உரிய அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் எப்போதும் போல பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என போலீசார் மற்றும் மீட்புப்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து … Read more

இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேத் மிடில்டன் கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து எதிர்மறையான தகவல்கள் பரவின. சமீபத்தில் அன்னையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்ட குடும்ப புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, அவர் தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டிருந்ததே … Read more

பீகாரில் டிராக்டர் – கார் மோதி விபத்து: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

பாட்னா, பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு 10 பேர் காரில் அவர்களது வீட்டிற்கு இன்று காலை சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த கார் பஸ்ரஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் அதிபயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி … Read more

ஐ.பி.எல். 2024; கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார் மிட்செல் ஸ்டார்க்

கொல்கத்தா, 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் … Read more

ரஷியாவில் போருக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்… எங்களை வெளியேற்றுங்கள்: மீண்டும் வீடியோ வெளியிட்ட இந்தியர்கள்

ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்ட இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இவ்வாறு ராணுவத்தில் சேர்க்கப்பட்டடதாக கூறி, இந்தியாவின் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களை உடனடியாக மீட்கும்படி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில், இந்த குழுவினர் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளனர். உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக தங்களை ஏமாற்றி ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக … Read more

பொன்முடி பதவி விவகாரம்: கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. இதனால் அவரது பதவி பறிபோனது. இதனிடையே ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார். ஆனால், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இயலாது என … Read more

ஐ.பி.எல்.2024; சென்னை – பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை, இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் … Read more

3-ம் உலகப் போர்: நவீன உலகில் எதுவும் சாத்தியமே – புதின்

மாஸ்கோ, ரஷியாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். இந்நிலையில் ரஷியாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தேர்தலில், தற்போதைய அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. முதன்முறையாக ரஷிய வரலாற்றில் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடந்தது. உக்ரைன் போருக்கு மத்தியில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. … Read more

'போதைக்காக பாம்பு விஷம்..' விருந்து ஏற்பாடு செய்த பிரபல யூடியூபர் சிறையில் அடைப்பு

போதை விருந்து நிகழ்ச்சி ஒன்றில், போதை ஏற்றுவதற்காக பாம்பு விஷத்தை சப்ளை செய்ததாக பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் (வயது 26) உள்ளிட்ட சிலர் மீது கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த போதை விருந்து நடைபெற்றதாகவும், வெளிநாட்டு பெண்களை அங்கு வரவழைத்து, அவர்களுடன் பாம்பு விஷம் மற்றும் பிற போதைப் பொருட்களை உட்கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. எல்விஷ் யாதவ் தனது … Read more

சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணி: வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெயில்

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், டெல்லி கேப்பிட்டல்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. பெங்களூரு தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் சாய்த்தனர். இதையடுத்து … Read more